சீனாவுக்கு 15 டன் மருந்து பொருள் இந்தியா உதவி

லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவிற்கு இந்தியாவின் சார்பில் சுமார் 15 டன் அளவிற்கு மருந்து பொருட்கள் அளித்து உதவி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மாஸ்க்குகள், 5லட்சம் கையுறைகள் உட்பட சுமார் ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் ஹூபேய் சாரிட்டி பெடரேஷன் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.



சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும் சீன அதிபரிடம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி கூறினார். இதனையடுத்து கடந்த பிப்., 26ம் தேதி இந்திய விமானப்படை விமானம் சி-17 விமானம் மூலம் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் ஜன.,31, பிப்.,1 மற்றும் பிப்.,26 ஆகிய தேதிகளில் வூஹானில் இருந்து மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என 766 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 723 பேர் இந்தியர்கள். இவர்களை தவிர 43 வெளிநாட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 23 பேர் வங்க தேசம், 9 பேர் மாலத்தீவு, 2 பேர் மியான்மர், தென்ஆப்ரிக்கா, மடகாஸ்கர், உள்ளிடநாடுகளைசேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளனர். என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


Popular posts
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்
வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், ஏப்.,11ம் தேதி பிரதமர் காணொலி மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார்
Image
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
Image
பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஏப்.,14) முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது