இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள் இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி, பிராணிகளை காக்க செலவிடுவர்.
ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன. அது, இப்போதும் உள்ளது.அந்த நம்பிக்கை தான், இந்த கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது. சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது நல்லது தானே!
சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர், இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி, கமலா ராமமூர்த்தியை, 98404 56623 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச் சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன். அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்' என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள் வழங்கிவருகின்றனர்.